Sunday, January 6, 2013

மலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள்


புதுகை பூபாளம் கலைக்குழுவின் தோழர் பிரகதீஸ்வரன் 'இலங்கைத் தோழர் ஒருவரை கட்டாயம் சந்திக்க வேண்டும், முடிந்தால் ஒரு நேர்காணல் எடுங்கள்' என்று கூறி, அறிமுகப்படுத்தினார். அவருடனான உரையாடலில், ஏற்கனவே இங்கு கூறப்பட்டிருந்த செய்திகளுக்கு மாறாக, பல புதிய தகவல்களைக் கூறினார். அந்த உரையாடல் கீற்று வாசகர்களுக்காக இங்கு தரப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக தோழரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. - கீற்று நந்தன்

கேள்வி: இலங்கை மலையக மக்களின் நிலைமை போருக்கு முன் எப்படி இருந்தது? மற்றும் போருக்குப் பின் எவ்வாறு உள்ளது?

பதில்: போருக்கு முன் அல்லது பின் என மலையக மக்களின் நிலைமையை ஒப்பிடும் அளவுக்கு பாரிய அளவு வித்தியாசம் எதுவும் இல்லை. ஏனென்று சொன்னால் மலையக மக்கள் போரினால் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் மறைமுகமான எல்லா பாதிப்புகளுக்கும் மலையக மக்கள் ஆளானார்கள். அதாவது முழு நாட்டில் வசிக்கிற தமிழ் மக்கள் யாராக இருந்தாலும் எந்தப் பகுதியில் வசித்தாலும் பொலிஸிடம் தங்களைப் பற்றிய பதிவு செய்யவேண்டும், அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் ஏதாவது தாக்குதல் சம்பவம் நடந்தால் அதன் எதிரொலியாக மலையகப் பகுதிகளிலும் பொலிஸின் கடுமையான சோதனைகள் மற்றும் தேடுதல்கள் இருக்கும். அதே நேரத்தில் முழு நாட்டிலும் இருந்த பிரச்சனை சோதனைச் சாவடிகள். இது வடக்கு கிழக்கு மட்டுமல்ல மலையகப் பகுதிகளிலும் கடுமையாக இருந்தது.



இன்றைக்கு சோதனைச் சாவடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளன. வட கிழக்குப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் முன்பை விட அதிகம் இருந்தாலும் சோதனை நடைபெறுவது குறைந்துள்ளதாக அங்கு சென்று வரும்போது அறிய முடியும். மலையகப் பகுதிகளில் பிரதான சோதனைச் சாவடிகள் தவிர வேறு ஏதும் இல்லை. ஆனால் சோதனைகள் நடைபெறுவது குறைவு. மற்றபடி போருக்கு முன்பு தமிழ் மக்களிடம் இருந்த பாதுகாப்புத் தன்மை இப்போது இல்லை; அதாவது போருக்குப் பின் பாதுகாப்பற்ற மனநிலை நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களிடம் (வடக்கு, கிழக்கு, மலையக, தென் மற்றும் தலைநகரில்) உள்ளது.

கேள்வி: பாதுகாப்பற்ற மனநிலை என்றால் எப்படி?

பதில்: மலையகப் பகுதிகளில் இருந்த தமிழர்களுக்கு போருக்கு முன்பு இருந்த மனநிலை என்னவென்றால் புலிகள் பலமாக இருப்பதனால் மலையகப் பிரதேசத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் அரசாங்கத்தினரோ அல்லது பெரும்பான்மை சமுகத்தினரோ (சிங்களவர்கள்) மலையக தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பது இதற்கு சிறந்த உதாரணம். பெரும்பாலும் 1983க்கு முன்பு நடைபெற்ற வன்முறைச்செயல்கள் மலையக தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி நகரச் செய்தது. குறிப்பாக வவுனியா, முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 1983 ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு அந்த நிலை ஏற்படவில்லை. ஏனெனில் போராளி அமைப்புகள் பலம் பெற்றதன் காரணமாக பாரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்கள் ஏற்படவில்லை, சோதனைச் சாவடி கெடுபிடிகளைத் தவிர. ஆனால், 2009ம் ஆண்டு போரில் புலிகள் இயக்கம் தோற்றடிக்கப்பட்ட பின் மலையகத்தின் மக்கள் ஐதாக வாழ்கின்ற இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் இவ்வாறான வன்செயல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அண்மையில் இரத்தினபுரி மாவட்ட நிவித்தகலையில் மலையக மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டதோடு அவர்களின் வீடு உட்பட அவர்களது உடமைகள் அழிக்கப்பட்டன.

கேள்வி: 1983க்கு முன்னர் எப்படி மற்ற பகுதித் தமிழர்கள் வன்முறை தாக்குதலுக்கு ஆளானார்களோ அதேபோல் மலையக தமிழர்களும் ஆளானார்களா?

பதில்: ஆம், தொடர்ச்சியாக..

கேள்வி: அதுகுறித்து கூறமுடியுமா?

பதில்: 1956க்குப் பிறகு தனிச் சிங்கள சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பிறகு, அதன் முக்கிய பகுதியாக "ஸ்ரீ" என்ற சிங்கள எழுத்து வாகனங்களுக்கான பொது எழுத்தாக்கப்பட்டபொழுது, மலையகப் பிரதேசத்தில் பிரான்சிஸ், அய்யாவு என்ற இருவர் அதற்கான எதிர்ப்புப் போராட்டதிலே பொலிசாரின் தாக்குதலில் பலியாயினர். மேலும் இலங்கையின் சுதந்தரத்திற்கு முன்னரும் இவ்வாறான நிலை காணப்பட்டது. அதாவது அங்கிருந்த தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கம் என்ற முறையிலே ஆங்கில ஆட்சியாளர்களின் பல ஒடுக்குமுறைகளுக்கு ஆளானார்கள். அதில் முதலாவது போராளியாக கோவிந்தன் என்பவர் முல்லோயா என்ற தோட்டத்திலே 1940களின் ஆரம்பத்தில் சிங்களப் பொலிசாரால் சுடப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த நிலை படிப்படியாக தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்திலே மலையகத் தமிழர்களின் செறிவுப் பிரதேசமான தலவாக்கலை பிரதேசத்தில் ஏழாயிரம் ஏக்கர் தேயிலை காணியினை சிங்களர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கண்ட நடவடிக்கையின் எதிர்ப்புப் போராட்டத்திலே சிவனு இலட்சுமணன் என்ற தோட்டத்தொழிலாளி பொலிசாரின் துப்பாக்கிச்சூடுக்கு பலியானார். அதன்பின் காணி பிரித்துக் கொடுப்பதிலிருந்து அரசு பின்வாங்கியது. இவ்வாறு பல சம்பவங்கள் மலையகத்தின் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை பல மலையகத் தமிழர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களிலும், இன வன்செயல்களுக்கு எதிரான போராட்டத்திலும் வீர மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மிகத் தீவிரமான வன்செயல் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.

கேள்வி: எந்தளவுக்கு?

பதில்: இங்கு தமிழகத்திலே இருக்கக்கூடிய பா.ராகவன் எழுதிய 'பிரபாகரனின் வாழ்வும் மரணமும்' என்ற புத்தகத்திலே கூட 1983 கலவரம் வடகிழக்குப் பகுதியில்தான் நடந்ததாக கூறியுள்ளார் அது முற்றிலும் தவறான விடயமாகும். வடக்கில் பதிமூன்று ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதற்கு சிங்களர்களின் பதில் நடவடிக்கை முதலில் தலைநகர் கொழும்பு பிரதேசத்தில் தான் ஏற்பட்டது. 1983 கலவரத்தில் மலையகப்பகுதி, கொழும்பு மற்றும் தலைநகரை அண்டிய பகுதிகள், தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களில்தான் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன

கேள்வி: இந்த கலவரம் சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்டதா?

No comments:

Post a Comment